மதுபானகடையை பெண்கள் மூடினார்கள்!

ஜி.கே.சேகரன்,
சத்துவாச்சாரியில் குறிஞ்சி நகர் பகுதியில் புதியதாக அரசு மதுபானகடையை திறக்க பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு முற்றுகை எதிர்ப்பால் கடை மூடப்பட்டது - காவல்துறையுடன் வாக்குவாதம்
வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் பகுதியில் மந்தைவெளி பாலாறு செல்லும் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று திடீரென திறக்கப்பட்டது.
அப்பகுதி அருகில் பள்ளி இருப்பதாலும் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல மதுகடை இடையூறாக இருக்கும் என்பதாலும் முழுவதும் குடியிருப்பு பகுதி என்பதால் அரசு மதுபான கடையை அங்கு அமைக்க கூடாது எனவும் இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி பெண்கள் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். புதியதாக திறக்கப்பட்ட மதுபானகடையை மூடினார்கள் பெண்களும் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடை இனி இங்கு திறக்கப்படாது என உறுதியளித்தபின்னர் மக்கள் கலைந்து சென்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.