வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடி வீடு! பாலாற்றில் செல்பி எடுக்க ஆட்சியர் தடை!

கு.அசோக்,

 பாலாற்றில்  பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் கரையோரும் அமைக்கப்பட்டிருந்த அழகு மாடி வீடு ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

  வேலூர் மாவட்டம். குடியாத்தம் அடுத்த ஐதர்புரம் கிராமத்தில் பாலாறு நகர் என்கிற பகுதி உள்ளது.

   இங்கு ஆற்றில் கரையில் வழக்கறிஞர் இளங்கோ என்பவர் சொந்தமாக மாடிவீட்டு கட்டியுள்ளார்.

  இந்நிலையில் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது.

  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ளவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வேறு இடத்தில் தங்க வைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட மணல் அரிப்பைத்தொடர்ந்து மாடிவீடு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கடைசியில் இழுத்து செல்வது வரையிலான காட்சிகளை அந்த கிராமத்து இளைஞர் படம் பிடித்துள்ளார்.

  அந்த வீடியோதான் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

  பாலாற்றின் கரை அருகே செல்பி எடுக்க தடை!

  இந்நிலையில் வேலூர் பாலாற்று பாலத்தின் இருகரைகளையும் தழுவி வெள்ளம் புரண்டோடிக்கொண்டிருக்கிறது.

 இந்த காட்சிகளை காண மக்கள் திரண்டு வருகிறார்கள்.

  அவர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்களின் உத்தரவின் பேரில் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக செல்பி எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.