ஏணி மேல் ஏறி ஆய்வு செய்த ஆட்சியர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
மழைகாலம் என்பதால் மாவட்டம் முழுவதிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் வேலூர் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்.
இந்நிலையில் அவர் அணைக்கட்டு பகுதியில் உள்ள கீழ்கொத்தூர் கிராமத்துக்குச் சென்று பள்ளிக்கூட கூறையை ஏணி மீது ஏறி ஆய்வு நடத்தி சில பாதுகாப்பு பணிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் அந்த பகுதியிலுள்ள ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் மற்றும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உடனிருந்தார்.