வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்!

வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  மாவட்ட நிர்வாகம்,  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப  அவர்கள் ஓட்டேரி முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

  தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவர் திரு.மு.பாபு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குநர் திரு.ஆர்.அருணகிரி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.நாகராஜன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் திரு.க.காந்தி, முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரி முதல்வர் முனைவர் அ.மலர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.ந.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.