கள்ள சாராயம் குடித்த 28 பேர் சாவு! குஜராத்தில் பரிதாபம்!!

கள்ள சாராயம் குடித்த 28 பேர் சாவு! குஜராத்தில் பரிதாபம்!!

ஜார்ஜ்.ரவி,

கள்ள சாராயம் குடித்த 28 பேர் குஜராத்தில் பரிதாபமாக செத்தனர்.

இது பற்றின விவரம் வருமாறு,

 குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.    இதுகுறித்து, குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், நேற்று அதிகாலை பர்வாலா தாலுகாவின் ரோஜித் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற கிராமங்களில் வசிக்கும் சிலரின் உடல்நிலை மோசமடைந்தது.

  அவர்கள் முன்தினம் இரவு உள்ளூர் சாராயம் குடித்தது தெரியவந்தது. பர்வாலா மற்றும் பொடாட் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது".

 விசாரித்த போது, சிலர் " போலி நாட்டு மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

 போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த பொடாட் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளோம் என்றார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், போலி மது விற்பனை செய்பவர்களை பிடிக்கவும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பாவ்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் தெரிவித்தார்.

 இந்நிலையில் சாவு எண்ணிக்கை அதிகமாகும் என்று கூறப்படுகிறது.