சவக்குழியில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயி:-ஆட்சியரை அழைத்ததால் பதற்றம்!

சவக்குழியில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயி:-ஆட்சியரை அழைத்ததால் பதற்றம்!

 பி.ஆர்.ஆனந்த்,

 மாவட்ட ஆட்சியர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய்யக்கோரி சுடுகாட்டில் சவக்குழி தவ போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி...

   திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்ட அரசு ஊழியர்களை கண்டித்து விவசாயி சவக்குழியில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

   சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வனத்துறை, வருவாய் துறையினர் செயல்படுகிறார்கள்.

  தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை சாதாரண விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகள் செய்து கொடுப்பதற்கு மாறாக எதிர்த்து செயல்படுவதாகவும்,  மாதாந்திரம் நடக்கும் விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மனமுடைந்தார் விவசாயி.   

  இந்நிலையில் அவர் ஆணி கட்டிய செருப்பை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று போராட்டம், தீ மிதித்து சத்தியம் செய்யும் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லலை.

  இந்நிலையில் தற்பொழுது விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் விவசாயி ராமஜெயம் சவக் குழியில் இறங்கி படுத்து தவ போராட்டத்தில்; ஈடுபட்டார்.

  தகவலறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் விவசாயிடம் சமரசம் பேசினர். ஆனால் ராமஜெயமோ ஆட்சியரை இங்கு நெராக வரச்சொல்லுங்கள் என்கிற கோரிக்கையை முன் வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

 இருப்பினும் விவசாயிகளின்  கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என கூறி சவக்குழியில் இருந்து எழுப்பி  அவரை கூல் படித்தியது காவல் துறை