பெண் போலிசாரின் செம டான்ஸ்! உற்சாகப்படுத்திய டி.ஐ.ஜி!

 

கு.சேகரன்,

  பெண் போலிசார் விசில் அடித்து செம டான்ஸ் ஆடினர். அவர்களை டி.ஐ.ஜி மு.ஆனிவிஜயா இ.கா.ப. அவர்கள் உற்சாகப்படுத்தினார்.

 மகளிர் தின விழாவை முன்னிட்டு வேலூரில் 4 மாவட்ட மகளிர் காவலர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் போலிசார் கலந்துகொண்டு வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்

 வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேலூர்,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

   வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 4 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பெண் ஆய்வாளர்கள் மற்றும் உதவி பெண் ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் என பாரம்பரிய பட்டுசேலை அணிந்து வந்து மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்டனர்.

 இடையே விசில் பறக்கும் டான்ஸிம் இடம் பெற்றது.

  உற்சாக மிகுதி ஏற்பட்டு டிஐஜி அவர்களையும் நடனத்தில் பங்கேற்க வைத்தனர். ஒருகட்டத்தில் அவரை அலேக்காக தூக்கி ரவுண்டு அடித்தனர்.

   குறிப்பாக பெண் காவலர்கள் எப்போதும் மன சுமையுடனும் பணிசுமையுடனும் இருந்த நிலையில் முதல்முறையாக 4 மாவட்ட பெண் காவல்துறையினர் மன மகிழ்ச்சியுடன் இந்த விழாவை கொண்டாடினார்கள்.

  மேலும் அவர்களுக்கு உணவுகளும் அளிக்கப்பட்டது. அனைவரும் தங்களின் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பரிமாறிகொண்டனர்.

   இது பெயர் அளவுக்கு விழாவாக இல்லாமல் பணிசுமை இல்லாமல் மன மிகிழ்ச்சியுடன் இன்று ஒரு நாள் பெண் காவல்துறையினர் விழாவை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.