ஜே.சிபி மூலம் வீடுகள் இடிப்பு! நாங்கமட்டுமா நீர்பிடிப்பு இடத்தில் உள்ளோம்! மக்கள் கண்ணீர்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குகையநல்லூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்களது வீடுகளை இடித்துவிட்டு வெளியேற்றி நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். நீர்பிடிப்பு பகுதியில் அத்துமிறி வீடுகட்டியிருப்பதாக அதற்கு அரசு அதிகாரி சார்கள் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால் வீடுகளை இழந்தவர்களில் 17 குடும்பத்தினருக்கு மட்டும் காட்பாடி அடுத்த புதூர் கிராமத்தில் அரசின் இலவச வீட்டு மனையும் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு ஆள் நடமாட்டமேயில்லாத இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுநாள்வரை பட்டா வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுவதுடன், அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு தீக்குளிக்கவும் முயற்சி செய்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தினர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் தெரிவிக்கையில், நாங்கள் தொழிலாளிகள், குறிப்பாக ஏழைகள்.
கடன் வாங்கியும் வட்டிக்கு பணம் பெற்றும் ஆசையாசையாய் கட்டிய வீடுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்துவிட்டனர்.
நாங்கள் பொது இடங்ககளிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளோம். எங்களில் பலர் இடித்து தள்ளப்பட்டுள்ள அந்த வீடுகளிலேயே கொட்டும் பணியிலும் உணவு சமைத்து அங்கேயே உறங்கியும் வருகிறோம்.
இடிக்கப்பட்ட அதே நீர்பிடிப்பு பகுதியில் தான் அரசு கட்டிடங்கள் தபால் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகமும் இரண்டு கோயில்கள் உட்பட கட்டப்பட்டுள்ளன.
ஆனால் நாங்கள் குடியிருந்த வீடுகளை மட்டும் இடித்து சின்னாபின்னமாக்கிவிட்டனர் என வேதனையுடன் பேசிய அவர்கள் தனியார் கல்வி நிறுவனம் ஏகப்பட்ட நீர்பிடிப்பு இடங்களை ஆக்கிரதமித்து கட்டிடங்கள் எழுப்பியிருக்கிறார்கஆளே துணிவிருந்தால் அதனை போய் மீட்டு அரசாங்கத்துக்கு விசுவாசம் காட்டுங்களேன் என்கிறார்கள் கண்ணீருடன்.