ஏழுவிதமான இலவச பயிற்சி! உதவித் தொகையுடன் அரசு ஐ.டி.ஐ. யில் சேர கலெக்டர் அழைப்பு!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினை ஒட்டி, ஆம்பூர் ஐநுடுஊ காதுகேளாதோருக்கான சிறப்புப் பள்ளியில் வருகின்ற 16-09-2023 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் புதியதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்டஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.
மண்டே பெட்டிஷன்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்;வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொது மக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும் வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் 344 என மொத்தம் மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.ண்பெலிக்ஸ் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.பாலசுப்ரமணியன், உதவி ஆணையர் (கலால்) திரு.ஜோதிவேல், உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி.விஜயகுமாரி, அனைத்து துறை அலுவலர்கள்; மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஐ.டி.ஐ.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் ரோடு வேப்பமரச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2023ஆம் ஆண்டிற்கு ஏற்கனவே நடைபெற்ற சேர்க்கையின் முடிவில் மீதமுள்ள தொழிற் பிரிவுகளுக்கான பயிற்சியாளர் நேரடி சோக்கை இரண்டாவது முறையாக 23.09.2023 வரை மேற்கொள்ள கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :-
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் வாணியம்பாடியில் உரிய சான்றிதழ்கள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக மொத்தம் ரூ.235/- ஆகியவற்றுடன் நேரடியாக வந்து பயிற்சியில் சேர்ந்துக்கொள்ளலாம்.
காலியாக உள்ள தொழிற் பிரிவுகள்
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
( 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும்.)
- நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம்
- உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம்
- தொழிற்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர்
வயது வரம்பு : -
பெண்கள் - வயது உச்ச வரம்பு இல்லை.
ஆண்கள் - 14 வயது முதல் 40 வயது வரை.
ஐஐஐ.அரசின் சலுகைகள் :-
பயிற்சி கட்டணம் ஏதுமில்லை
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுபவை.
- மாதம் ரூ.750 உதவித்தொகை.
- விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி.
- விலையில்லா பாட புத்தகங்கள்.
- விலையில்லா மிதிவண்டி.
- விலையில்லா மடிக்கணினி.
- விலையில்லா வரைபடக்கருவிகள்.
- இலவச பேருந்து பயண அட்டை.
இவ்வாறுமாவட்டஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்