இறந்த ஏழு பேருக்கு நிதி வழங்கிய அமைச்சர்! பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆட்சியர் ஆறுதல்!

தெ.நெல்சன்,
பேர்னாம்பட்டு வட்டத்தைச் சேர்ந்தவர்கள், திருப்பத்தூர் சண்டியூர் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இறந்த ஏழு பேர்களுக்கு முதலமைச்சர் தலா ஒரு லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் இறந்த 7 நபர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ,குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., பாராளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன், திரு.து.மு.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஏ. பி. நந்தகுமார், திருமதி அமுலு விஜயன், திரு.வில்வநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.
நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த பேர்ணாம்பட்டை சார்ந்த 7 பெண்களின் குடும்பத்தை சார்ந்த உறவினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் குடியாத்தம் கங்காதாரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது குடியாத்தம் நகர மன்ற தலைவர் திரு.சௌந்தரராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.வெங்கட்ராமன், நகராட்சி ஆணையாளர் திரு.மங்கையர்கரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.திருமால் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவையும், மருந்தகத்தையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது மருந்து மாத்திரை சரியா கொடுக்குறாங்களா? என்று நோயாளிகளிடம் ஆட்சியர் விசாரித்தார்.
அடுத்ததாக, குடியாத்தம் பெரும்பாடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பாடுகளை பார்வையிட்டதுடன் மாணாக்களுடன் அமர்ந்து உண்வு உட்கொண்டார். இதனால் பள்ளி சிறார்கள் மகிழ்ந்தனர்.
அதே போல் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் திரு.தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.சுமதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.