2 நாட்களாக மாரியம்மன் கோவில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன்! திருமாவளவன் பேச்சு!

ஜி.சாந்தகுமார்,
தொடர்ந்து 2 நாட்களாக முத்து மாரியம்மன் கோவில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன் என்று திருமாவளவன் பேசியிருக்கிறார். கடந்த மாதம் சென்னையில் பெய்த கன மழை வெள்ளத்தில் விசிக தலைவர் திருமாவளவனும் சிக்கிகொண்டார். 2 நாட்கள் சிக்கி தவித்ததைப் பற்றி அவர் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தின் போது சொன்னார்.
மிக்ஜாம் புயல் காரணமான ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய திஒருமாவளவன், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க முடியாது என அகந்தையோடு நிர்மலா சீதாராமன் தந்த பேட்டியை கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால்தான் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற முதல்வரின் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அதனை ஆர்பாட்டத்தில் இணைத்தோம்".
பாஜக ஆளும் மாநிலங்களில் கேட்கும் நிதியை விட கூடுதலாக கொடுக்கிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்கள் வைக்கும் கோரிக்கையைக் கூட அலட்சியப்படுத்துகிறார்கள், தமிழகத்தில் பாஜக இல்லை என்பதால் அக்கட்சியினர் விடுக்கிற கோரிக்கையையும் கூட மத்தியில் உள்ளவர்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
சென்னையில் டிசம்பர் 4ஆம் தேதி கடுமையான புயலை சந்தித்ததோடு வரலாறு காணாத மழையும் பெய்தது. சென்னையே இரண்டு நாட்கள் வெள்ளத்தில் மூழ்கியது. யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாத அளவு பெருமழையாக அது இருந்தது. ஆனால், நமக்கு வழக்கமாக தரும் நிதியை தந்துவிட்டு இனி கூடுதலாக தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அலட்சியமாக கூறுகிறார்கள் என்று விமர்சித்தார்.
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நம்மால் ஓடோடிச் சென்று உதவி செய்ய முடியவில்லை. நானே இரண்டு நாட்கள் வரை வேளச்சேரிக்குள் சிக்கிக்கொண்டேன். எனக்கே முத்து மாரியம்மன் கோயிலில் சமைத்த சாம்பார் சாதம்தான் கிடைத்தது, இரண்டு நாட்கள் மின்சாரமின்றி தவித்தோம், உணவு விடுதிகள் கூட இல்லை என்று பேசினார்.