எம்.எல்.ஏ.வின் மனைவியை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர் சிறையில் அடைப்பு! தேம்பி தேம்பி அழுதார்!

எம்.எல்.ஏ.வின் மனைவியை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர் சிறையில் அடைப்பு! தேம்பி தேம்பி அழுதார்!

  ஜி.கே.சேகரன்,

    அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்து அவதுறாக பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவிவிட்ட வழக்கறிஞரை போலிசார் கைது செய்திருக்கிறார்கள். அதுவும் திமுகவினர் சாலை மறியல் செய்து, வழக்கறிஞருக்கு சொந்தமான ஓட்டலுக்கு தீ வைத்து கொளுத்திய பின்னரே இந்த கைது வைபவம் நடந்துள்ளது.

  மேற்படி அவதூறாக பேசிய வழக்கறிஞரின் பெயர் முத்துக்குமரன். கடந்த மூன்று தினங்களுக்கு முன் அவரும் திமுகவில் தான் இருந்தார். இந்நிலையில் அவர் சிறைபக்கம் செல்ல வேண்டியதாயிற்று.

இது குறித்து விவரம் வருமாறு,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியை சேர்ந்தவர் சரிதா. இவர் 1வது வார்டு மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் முத்துக்குமரன் வழக்கறிஞர்.

 அப்படியிருக்க கட்ந்த ஆண்டு இவரை யாரோ சிலர் பின்தொடர்ந்தது தாக்க முயற்சி செய்வதாக முத்துக்குமரன் உமராபாத் காவல் நிலையத்திலும் ஆம்பூர் நீதிமன்றத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தொடர்ந்து புகார் அளித்து சமூக வலைதளங்களில் ஆடியோக்களை வெளியிட்டு வந்தார்.

  அந்த ஆடியோக்கள் அத்தனையும் அவருடைய அந்தஸ்த்தை மீறியதாகவே பார்க்கப்பட்டது.

  எம் .எல் .ஏ., உள்ளிட்ட திமுக முக்கியஸ்தர்களை அவர் காய்ச்சி எடுத்தார். இவை அனைத்துகு தலைமையின் பார்வைக்கு புகாராக சென்றது.

  அதன் பேரில் விசாரித்த திமுக தலைமை வழக்கறிஞர் முத்துக்குமரனை  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. அதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சி நாளேடானமுரசொலியில் வெளியிட்டார்.

     இந்நிலையில் மனமுடைந்த வழக்கறிஞர் முத்துக்குமரன் ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதனின் மனை மற்றும் சாதியை மையப்படுத்தி, எழுத்தில் சொல்லமுடியாத அளவுக்கு ஆபாசமாகவும், அவதூராகவும் பேசி சோஷியல் மீடியாக்களில் அதை பரவவிட்டார்.

  இதனால் திமுகவினர் ஆவேசம் அடைந்தனர். குறிப்பாக நரியம்பட்டைச் சேர்ந்த போலிஸ் புகழ் பாரதி என்பவர் தலைமையில் திரண்டனர்.

  மேலும், ஆம்பூர் எம் .எல் .ஏ. வில்வநாதன் குடும்பத்தையும், மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜி உட்பட திமுக எம்எல்ஏ களையும் அமைச்சர்களையும் குறிவைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    இந்நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வந்த நிலையில், முத்துக்குமரனை கைது செய்யக்கோரி ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் பாரதி என்பவர் தலைமையில் மறியல் நடத்தப்பட்டது. அதே போல் முத்துக்குமரன் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 இதனை தொடர்ந்து 2 மணி நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் முத்துகுமரனை அவரது வீட்டில்  கைது செய்தனர்.

  பின்னர் அவரை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

   இந்நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமரனுக்கு சொந்தமான உணவு விடுதி மற்றும் தேனீர் கடை ஆகியவற்றை சிலர் தீவைத்து கொளுத்திவிட்டு, போகிற போக்கில் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி  மற்றும் டிவிஆர் உட்பட அனைத்தையும் கழற்றி எடுத்துகொண்டு ஓடிவிட்டனர்.  சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குளிதிகை என்ற இடத்தில் இவை செயல்பட்டு வந்த நிலையில் கொளுத்தப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

 மேலும் அபிகிரிபட்டறை பகுதியை சேர்ந்த  துளசிராமன் என்ற வழக்கறிஞர் முத்துக்குமரனின் ஜூனியர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதால் அவரையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளனர். இதனால் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 குறிப்பு:- போலிசாரால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் முத்துக்க்குமரனை உமராபாத் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது கதறி அழுதார். நியாயத்தை கேட்பவர் அதர்மவாதியா என்று தேம்பி தேம்பி அழுதார்.ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத போலிசார் அவர்கள் கடமையை ஆற்றினர்.