செமஸ்டர்கள் இனி ஆன்லைன் தான்!

சு.அபிஷேக்,
கல்லூரிகளுக்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆப் லைனில் தான் நடத்துவோம் என்று உயர்கல்வித் துறை சொல்லி வந்த நிலையில், அதற்கு மாணாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவமும் உள்ள கல்லூரிகளுக்கு வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடக்க உள்ளது.
அப்படியிருக்க கொரோனா தொற்று பரவலால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தத்தை போலவே இந்த முறையும் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஆன்லைன் தேர்வுகளில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இறுதி ஆண்டு தேர்வுகள் நேரடி தேர்வு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.