வேலூர் ஆட்சியர் ஹேப்பி! வாரி வழங்கப்பட்ட அரசு திட்டங்கள்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் திருமனி, ஒழையாத்தூர், விழுந்தாக்கல் ஆகிய ஊராட்சிகளில் நடைப்பெற்ற மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 182 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4,24,80,233/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.04.2022) வழங்கினார்.
மனுநீதி நாள் முகாமில் வருவாய்த் துறையின் சார்பாக இணையவழி பட்டா (ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக ) 42 பயனாளிகளுக்கு ரூ.18,90,000/- மதிப்பீட்டிலும், இலவச வீட்டுமனை பட்டா 12 பயனாளிக்கு ரூ.5,40,000 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதிய தொகை 32 பயனாளிகளுக்கு ரூ.3,84,000/- மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டது.
மேலும், மாற்றுத்திறாளிகளுக்கான உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.24,000/- மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகை 10 பயனாளிக்குக்கு ரூ.1,20,000/- மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18000/- மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.79,20,000/- மதிப்பீட்டிலும் பலன்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட தொழில் மையத்தின் கீழ் சிமெண்ட் கான்கிரீட் பிளாக் உற்பத்தி 1 பயனாளிக்கு ரூ.3,15,58,000/- மதிப்பீட்டிலும், விவசாய இடு பொருட்கள் 10 பயனாளிக்கு ரூ.16,233/- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் இயற்கை முறை விவசாய இடு பொருட்கள் 2 பயனாளிகளுக்கு ரூ.10,000/- மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ. 4,24,80,233/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.
சிறப்பு மனுநீதிநாள் முகாமில் பொதுமக்களிள் கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பபட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும் எனவும், மேலும் திருமணி ஊராட்சிக்கு தார் சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து பேருந்து வசதி, நியாய விலை கடை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனவும், மேலும் திருமனி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மயானம் செல்வதற்கு தார்சாலை வசதி செய்து தரப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.தனஞ்செயன், கே.வி.குப்பம் ஒன்றிய பெருந்தலைவர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி.வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.முருகேசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.பேபி இந்திரா, வேளாண் இணை இயக்குநர் திரு.மகேந்திர பிரதாப் தீட்சித், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் திரு.புண்ணிய கோட்டி ஆகியோர் உள்ளனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.