ஊழலுக்கு வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர்களே துணை போகின்றனர்

ஊழலுக்கு வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர்களே துணை போகின்றனர்

ஜி.கே.சேகரன்

வாலாஜாவில் ஊராட்சி ஒன்றியகுழு நிர்வாகத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலர் அராஜக போக்கை கண்டித்தும் பாமக சார்பில் கண்டன ஆர்பாட்டம்  நடைபெற்றது,

 ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ராணிப்பேட்டை மேற்குமாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் உள்ளன இந்த ஊராட்சிகளில் பணிகள் நடக்காமலேயே பணி நடைபெற்றதாக கணக்கு எழுதி ஊழல்களை செய்து முறைகேடு செய்கின்றனர் மக்கள் நல பணிகளை செய்யாமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் செயல்படுகிறது இது குறித்து இந்த ஊழலுக்கு வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர்களே துணை போகின்றனர் ஊழல்கள் குறித்தும் பஞ்சாயத்துக்கள் செயல்படாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழக அரசு தலையிட்டு ஊழல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமகவினர் திரளானோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்