பிரதமர் உரையை மியூட் செய்த வேலூர் எ.பி.?!!!

ஜி.கே.சேகரன்,
இமாச்சல பிரதேசத்திலிருந்து பாரத பிரதமர் காணொளி மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் காணொளி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது பிரதமரின் நிகழ்ச்சியை மையப்படுத்தி அவர், ஹிந்தி நமக்கு புரியாது அதனால் நாம் நம் வேலையை பார்ப்போம் என கூறி மோடியின் காணொளியை சவுண்டை மியூட் செய்துவிட்டு, அவரே ஒரு கூட்டத்தை துவங்கி அதை பந்தாவாக நடத்தினார். இதனைப் பார்த்த பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ரிது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம்,வேலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் பாரத பிரதமர் இமாச்சல பிரதேசத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு காணொளி மூலம் விவசாயிகளிடம் கலந்துரையாடலும் மற்றும் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுடன் காணொளி மூலம் பேசும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வேலூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி விழாவில் விவசாயிகள் பிரதமர் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் வரவழைக்கப்பட்டு கூட்டரங்கில் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி துவங்கி பிரதமர் பேசினார், அப்போது அந்த காணொளி பேச்சை முழுமையாக சத்தமில்லாமல் செய்துவிட்டு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஹிந்தி நமக்கு புரியாது அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும் நம் வேலையை நாம் பார்ப்போம் என கூறினார்.
அதோடில்லாமல் உறுப்பினர் கதிர் ஆனந்த், தமிழக முதல்வர் 20 ஆம் தேதி வேலூர் வருவது குறித்தும் அப்போது மனுக்கள் அளிப்பது குறித்தும் பேசினார்.
மேலும் அரசின் திட்டங்களை எப்படி விண்ணப்பித்து பெறுவது என அதிகாரிகளை விளக்கி கூற செய்துவிட்டு கடைசி வரையில் பிற்பகல் ஒருமணி வரையில் பிரதமர் பேசுவதை யாரும் கேட்காமல் செய்து விழாவை நூதனமாக புறக்கணிக்க செய்தார். இதனால் பொதுமக்களும் பயனாளிகளும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்
மாறுபட்ட கருத்து இருந்தாலும் பிரதமர் ஒருவர் காணொளி மூலம் அரசு விழாவில் பேசும் போது அவர் ஹிந்தியில் பேசுகிறார் என கூறி அதனை பயனாளிகளும் அதிகாரிகளும் கேட்க முடியாமல் தடுத்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
இவுரு நாடாளுமன்றத்துக்கு போனால் அங்குள்ள எம்.பிக்கள் இந்தியில் பேசினால் அப்போ என்ன செய்வாராம் என்று ஒரு சிலர் முனகினர்..