ரேஷன் அரிசி, கோதுமை மாவு பதுக்கல்:-பிடிபட்டவரை சிறைக்கு அனுப்பினர்!

ரேஷன் அரிசி, கோதுமை மாவு  பதுக்கல்:-பிடிபட்டவரை சிறைக்கு அனுப்பினர்!

  கு.அசோக்,

 ஆற்காடு அருகே தனியார் நெல் மண்டியில்  அரசி, கோதுமை பொருட்களை அரைத்து விற்பனை செய்து வந்தவரை  ஒருங்கிணைந்த மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வேல்முருகன் தெருவில்  ரேசன் அரிசி மற்றும் கோதுமைகளை பதுக்கி  வைத்து அதை  மாவாக அரைத்து விற்பனை செய்து வருவதாக  ஒருங்கிணைந்த மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில்  அப்பிரிவு துணை கண்காணிப்பாளர் நந்தகுமார், ஆய்வாளர் சதீஷ் குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மோகன்,ஆர்,ஐ மாதவன் ஆற்காடு வட்ட வழங்கல் தாசில்தார் சந்தியா மற்றும் பறக்கும் படை வட்டாட்சியர் இளஞ்செழியன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று

மேற்படி நெல் மண்டியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரசி 56 மூட்டையும், கோதுமை 104 முட்டை என மொத்தம் 9 டன் மதிப்பிலான ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

  மேலும் ரேசன் பொருட்களை பதுக்கி வைத்து மாவாக அரைத்து விற்பனை செய்து வந்த ராஜேஷ்-46 என்பவரை வேலுர் மண்டல குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலுர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 ஆற்காடு பகுதியில் 9 டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பதுக்கி வைத்து மாவாக அரைத்து விற்பனை செய்த சம்பவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.