கோவை பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

கோவை பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

    கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கோரியபடி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

  கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். அந்தப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்ரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததார்.

 இந்நிலையில் அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்டார்.

  கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் அவ்வப்போது பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புகளின்போது ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவியிடம் அத்துமீறியதாக மாணவியின் சக பள்ளி நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

  அந்தப் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு பூமார்கெட் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 படித்து வந்தார்.

 அப்போதும் அவளை அந்த வாத்தியார் விடவில்லை.

 இறந்துபோன மாணவிக்கும் ஆசிரியர் மிதுனுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் என்று கூறப்படும் ஆடியோ பதிவுகள் கசிந்துள்ளன. அந்த உரையாடல்களில் உள்ள உண்மைத்தன்மை குறித்து போலீசார் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

  இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில்  ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். அவன் உடுமலைபேட்டை சிறையில்அடைக்கப்பட்டார்.

  அதேநேரம், `மாணவி புகார் அளித்தபோதே பள்ளி முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது' எனக் கூறி ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள், மாணவியின் உறவினர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

  மேலும் சின்மயா வித்யாலய்தாவின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யும் வரையில் மாணவியின் உடலை வாங்க மாட்டோம்' எனக் கூறி அரசு மருத்துவமனையை அவர்கள் முற்றுகையிட்டனர்.

  இந்நிலையில் பள்ளி முதல்வர் மீதும் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சனிக்கிழமையன்று கோவை மாநகர தெற்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

 மாணவி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யத் தவறியதற்காக போக்சோ சட்டப்பிரிவு 21ன்கீழ் பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் தலைமறைவானதால் அவரைப் பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் மீரா ஜாஸ்மின் ஞாயிறு காலை பெங்களூருவில் செய்யப்பட்டுள்ளார்.

 

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

    கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கோரியபடி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

  கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். அந்தப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்ரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததார்.

 இந்நிலையில் அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்டார்.

  கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் அவ்வப்போது பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புகளின்போது ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவியிடம் அத்துமீறியதாக மாணவியின் சக பள்ளி நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

  அந்தப் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு பூமார்கெட் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 படித்து வந்தார்.

 அப்போதும் அவளை அந்த வாத்தியார் விடவில்லை.

 இறந்துபோன மாணவிக்கும் ஆசிரியர் மிதுனுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் என்று கூறப்படும் ஆடியோ பதிவுகள் கசிந்துள்ளன. அந்த உரையாடல்களில் உள்ள உண்மைத்தன்மை குறித்து போலீசார் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

  இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில்  ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். அவன் உடுமலைபேட்டை சிறையில்அடைக்கப்பட்டார்.

  அதேநேரம், `மாணவி புகார் அளித்தபோதே பள்ளி முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது' எனக் கூறி ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள், மாணவியின் உறவினர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

  மேலும் சின்மயா வித்யாலய்தாவின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யும் வரையில் மாணவியின் உடலை வாங்க மாட்டோம்' எனக் கூறி அரசு மருத்துவமனையை அவர்கள் முற்றுகையிட்டனர்.

  இந்நிலையில் பள்ளி முதல்வர் மீதும் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சனிக்கிழமையன்று கோவை மாநகர தெற்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

 மாணவி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யத் தவறியதற்காக போக்சோ சட்டப்பிரிவு 21ன்கீழ் பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் தலைமறைவானதால் அவரைப் பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் மீரா ஜாஸ்மின் ஞாயிறு காலை பெங்களூருவில் செய்யப்பட்டுள்ளார்.