தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! அமைச்சர் எ.வ.வேலு நேரில் அஞ்சலி!

தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! அமைச்சர் எ.வ.வேலு நேரில் அஞ்சலி!

 ம.பா.கெஜராஜ்,

 முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக திருவண்ணாமலை இருந்தது முதல் 1996 ஆம் ஆண்டுவரை திமுக சார்பாக நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெ.சு.திருவேங்கடம். (1977,1980,1989,1996).

  உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த அவர் திடீரென்று நேற்று இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.

  இந்த தகவலை அறிந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.மு.பெ.கிரி, ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 அப்போது  ஸ்ரீதரன், கருணாநிதி,கார்த்தி, வேல்மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

  மரணமடைந்த பெ.சு.திருவேங்கடத்தின் மகன் பெ.சு.தி.சரவணன் தற்போது கலசபாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.