ஹைவே பேட்ரோல் மெத்தனத்தால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் பலி! எஸ்.பி.நடவடிக்கை எடுப்பாரா?

டி.இ.முகமது,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர்.
பேர்ணாம்பட்டு, ஓனாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் இரண்டு வேன் மூலம் மைசூருக்கு சுற்றுலா சென்று ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை நாட்றம்பள்ளி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த வேன் ஒன்று பழுதாகியது. ஆகவே அந்த வேன் சாலையோரமாக நிற்கவைக்கப்பட்டது. அப்படியிருக்க வேனில் பயணித்தவர்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கி தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியம் தடுப்பின் மீது அமர்ந்திருந்தனர்.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று, பழுதாகி நின்ற வேனின் பின்பக்கமாக பலமாக மோதியது.
இதனால் வேன் சாலையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பு:- மாவட்டந்தோறும் ஹைவே பேட்ரோல் என்கிற போலிஸ் டீம் உள்ளது. அதே போல் டோல்கேட் நிர்வாகத்தின் சார்பிலும் பேட்ரோல் வாகனம் உண்டு.
அவர்கள் நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணித்து, விசாரிக்க வேண்டும், தூக்கம் வந்ததால் நிறுத்தினார்கள் என்று சொன்னால், உடனே அவர்களை, தூங்குவதற்காகவே நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் "பே" வுக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆனால் வாகனம் ரிப்பேர் காரணமாக நிறுத்தப்பட்டது என்றூ தெரியவந்தால், ரிப்லெக்டர் உள்ளிட்ட சாதனங்களை, பழுதாகி நிற்கவைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு பின்புறம் சாலைகளில் வைத்து பின்னாடி வரும் வாகனங்களுக்கு சமிக்ஞ்சை கொடுப்பார்கள்.
அதற்காகவே பணிக்கப்பட்ட இவர்கள், அவ்வழியே மாடு, மண், ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களை மடக்கி லஞ்சம் வாங்குவதற்காகவே அரசாங்க வாகனத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டும் தங்கள் கடமையை செய்திருந்தால் ஏழு பேர் சென்டர் மீடியம் தடுப்பின் மீது அமர்ந்திருக்க மாட்டார்கள்,விபத்தும் ஏற்பட்ட்டிருக்காது, இறந்திருக்கவும் மாட்டார்கள் அல்லவா?
இது போன்ற அதிகாரிகள் மீது எஸ்.பி.நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் கேட்கிறார்கள்.