சிறையிலிருந்து பரோலில் சென்ற 16 பேர் எஸ்கேப்!

ஜார்ஜ்.ரவி,
பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறை திரும்பாமல் 16 கைதிகள் எஸ்கேப் ஆகிய நிலையில் வர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹார்பூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் நெரிசலைக் குறைக்க உயர்மட்டக் குழுவின் உத்தரவின் பேரில் சிறிய குற்றங்களுக்காக அடைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் வயதான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பரோலில் சென்ற 16 கைதிகள் திரும்ப சிறைக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், பரோலில் சென்ற கைதிகளை கைது செய்யும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் மிஜாஜி லால் கூறியதாவது:- சிறையில் கைதிகள் 39 பேர் பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த மே மாதம் திரும்பி இருக்க வேண்டும். இதில் 23 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்பி வந்துள்ளனர். ஆனால் 16 கைதிகள் இன்னும் சிறை திரும்பவில்லை.
எஸ்கேப் ஆன 16 பேரையும் கைது செய்ய காவல் நிலையங்களுக்கும் எஸ்.பி.களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.