ஷாருக்கான் மகனை போதை வழக்கில் சிக்க வைத்தது யார்! 7ஆம் தேதிவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ஷாருக்கான் மகனை போதை வழக்கில் சிக்க வைத்தது யார்! 7ஆம் தேதிவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

 ம.பா.கெஜராஜ்,

 பாலிவுட் கதாநாயகனான ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் தற்போது சிறையில் உள்ளார்.

 அவர் மிகவும் ஆபத்தான வழக்கில் சிக்கியிருப்பது (சிக்கவைத்திருப்பது) அவரது குடும்பத்தை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

  போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவால்  (Narcotic Drugs and Psychotropic Substances Act) சட்டத்தின் 8C, 20 B, 27ஆகிய பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதுபற்றின விவரம் வருமாறு,

 கடந்த 2-ம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற ஒரு சொகுசுக் கப்பல் கோவாவை நோக்கி பயணிக்க தயாராகிக்கொண்டிருந்தது. அந்த கப்பலின் பெயர் 'கார்டெலியா`. ஆகும்.

 அதில் ஆயிரம் பயணிகள் இருந்தனர். அவர்களில் ஷாருக் காணின் மகன் மற்றும் அவரது சிநேகிதர்களும் அடக்கம்.

 இந்நிலையில் அந்த கப்பலில் தடை செய்யப்பட்ட கொகைன் உள்ளிட்ட அதிபயங்கரமான போதை பொருட்களை கொண்டு பார்ட்டி நடத்த திட்டமிடப்பட்டிருப்பதது. இந்த பார்ட்டிக்கான கட்டணம் ஒரு நபருக்கு 80 ஆயிரம் ரூபாயாம்.

  இது குறித்து நர்கோடிக் கன்ட்ரோல் பீரோ அமைப்புக்கு தகவல் பறந்தது.

  அதன் பேரில் அங்கு சாதாரண உடையில் சென்று ரெய்டு நடத்தியது அந்த அமைப்பு. 

 அப்போது போதைபார்ட்டி துவங்கி சற்று நேரம் ஆகியிருந்தது, அதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், மூன் மூன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மித் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ரந்த் சோக்கர், கோமித் சோப்ரா ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

 பிடிபட்டவர்களில் ஒரு இளைஞர் மட்டும் பதற்றம் அடைந்து அழ ஆரம்பித்துள்ளார். என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் என்று கதறியுள்ளார். அவரிடம் விசாரித்த போது அவரது தந்தை ஷாருக் கான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து உறுதி செய்த என்.சி.பி. மும்பை இயக்குநர் சமீர் வான்கடே செய்தியை வெளியிட்டார்.

 மேலும், சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,என வான்கடே தெரிவித்த நிலையில், பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்று என்.சி.பி. தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்து அதன்படியே வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கினார்.

 இந்த சம்பவம் நடந்த போது ஷாருக் கான் கலிபோர்னியாவில் சூட்டிங்கில் இருந்தாராம். அதை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில், பிரபல துப்பறியும் நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டு, 'கார்டெலியா`. கப்பலில் போதை பார்ட்டி நடந்தது உண்மைதானா? அல்லது என்னை குறிவைத்து என் மகனை அரெஸ்ட் செய்தார்களா என்றெல்லாம் விசாரிக்க சொல்லியிருக்கிறார்.

 மறுபக்கம் மஹாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் வரைக்கும் பிரஷ்ர் கொடுக்கவும் ஷா ருக் கான் தவறவில்லை.

 ஆனால் எதுவுமே எடுபடவில்லை. அதற்குள் ஊடகங்கள் செய்தி கோர்த்து வெளியிட துவங்கிவிட்டனர்.

  இந்த செய்தி தேசிய அளவையும் கடந்து பரபரப்பை உண்டாக்கியது.

  'கார்டெலியா`. கப்பலில் மட்டுமில்லீங்க, அது போல நூற்றுக்கணக்கான கப்பல்கள் போதை பார்ட்டி நடத்தி வருகிறது.

  பர்டிகூலராக இந்த கப்பலில் ஷாருக் கானின் மகனை குறிவைத்து இந்த ரைடு நடந்தது. இதன் பின்னணியில் கண்டிப்பாக அரசியல் உள்ளது என்கிறார்கள். ஏன்னா அந்த கப்பலில் முழுக்க முழுக்க போதை பார்ட்டி தான் நடக்குதாம்.

குறிப்பு:- ஆர்யன் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்ற சில உரையாடல்கள் அவருக்கும் போதைப்பொருள் பயன்படுத்தும் கும்பலுக்கும் இடையிலான தொடர்புக்கு ஆதாரம் என்று தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை கூறுகிறது. ஆனால், வெளிநாட்டில் படித்தவரான ஆர்யன் எந்த வகையிலும் போதைப்பொருள் பயன்பாடு அல்லது விநியோகத்தில் தொடர்பு கொண்டவர் அல்ல என்று கூறுகிறார். இந்த விவகாரத்தில் ஆர்யனின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு உத்தரவிடப்படும்வரை அவர் தொடர்புடைய எந்தவொரு வாட்ஸ் அப் செயலி உரையாடல்களும் வெளியிடப்படக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்றும் ஆர்யனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.