வேலூரில் ரவுடிகளுக்கிடையே கத்தி சண்டை!

வேலூரில் ரவுடிகளுக்கிடையே கத்தி சண்டை!

மதன்,

வேலூர் காகிதப்பட்டறை,  முருகன் கோவில் பின்புறம் உள்ள

சைதாப்பேட்டை வீதில் இறந்தவருக்கு காரியம் நடந்து கொண்டிருந்தது.

 அப்போது அந்த வீட்டின் முன்பாக ரோபோ என்பவரின் தம்பி மற்றும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

 அப்போது அதே பகுதியில் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் முன் விரோத காரணத்தால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு, கத்தியால் சரமாரி வெட்டிக் கொண்டனர். 

 இதில் இரு கோஷ்டிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் இருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.

 இதனால்  வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்   ஒருவர் பலி என்றும்  மேலும் ஒருவர் கவலைக்கிடம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து வடக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம்.

 இந்த கோஷ்டிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.