பேருந்து மூழ்கி 12 க்கும் மேற்பட்டோர் பலி! பலர் காணவில்லை!

பேருந்து மூழ்கி 12 க்கும் மேற்பட்டோர் பலி! பலர் காணவில்லை!

    ம.பா.கெஜராஜ்,

    ஆர்டிசி பேருந்துகளில் பயணம் செய்த 30 பயணிகள் நீரில் மூழ்கியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

  ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆந்திரப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்தின்  மூன்று பேருந்துகள் சிக்கிக் கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காணாமல் போயினர்.

   மீட்புப் பணியாளர்கள் 12 உடல்களை மீட்டனர்.

   ராஜம்பேட்டை, மண்பள்ளே, அகேபாடு, நந்தலூர் ஆகிய கிராமங்களில் வழியாக சென்ற பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கின. டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் பயணிகளும் பஸ்களின் மேல் ஏறிக் கொண்டனர்.

 அவர்களில் சிலரை உள்ளூர்வாசிகள் மீட்டனர், இருந்த போதும் 30 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் நண்டலூர் அருகே ஆர்டிசி பேருந்தில் இருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டன. குண்டலூரில் 7 பேரும், ராயவரம் பகுதியில் இருந்து 3 பேரும் கண்டெடுக்கப்பட்டனர்.

  அன்னமய்யா அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே இதற்கு காரணம்.

 அதே போல் மற்றொரு சம்பவத்தில், அனந்தபூர் மாவட்டம் சென்னேகோதப்பள்ளி மண்டலத்தில் உள்ள வெல்துர்த்தி கிராமத்தில் சித்ராவதி ஆற்றில் சிக்கித் தவித்த 10 பேர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

  தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை வருவாய்த்துறை, தீயணைப்புப் படை மற்றும் நீச்சல் வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

  மேலும் பென்னா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அனந்தபூர் மாவட்டம் சசனகோடா கிராமத்தில் சிக்கித் தவித்த இரண்டு இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் உதவியுடன் போலீஸார் மீட்டனர்.

  வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆய்வு நடத்தினார்.

   கனமழையால் பாதிக்கப்பட்ட கடப்பா, சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நிலவரம் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நேரில் பார்வையிட்டார்.

   விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கடப்பா சென்று ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு திருப்பதியில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

   பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசி, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். கனமழை காரணமாக நெல்லூர், அனந்தப்பூர், கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் நிலவும் தீவிர நிலை மற்றும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெகன் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.