ஆட்சியர் அமர்குஷ்வாஹா அவர்களால் கௌவரவிக்கப்பட்ட மூத்த குடிமக்கள்!

ஆட்சியர் அமர்குஷ்வாஹா அவர்களால் கௌவரவிக்கப்பட்ட மூத்த குடிமக்கள்!

 ஆர்.ரமேஷ்,

சர்வதேச மூத்த குடிமக்கள் தினத்தினை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சர்வதேச மூத்த குடிமக்கள் தினமான அக்டோபர் முதல் நாள் இன்று திருப்பத்தூரில் ஆட்சியர் அவர்களால் கொண்டாடப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு நபர் வீதம்  என்பது வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 8 நபர்கள் அழைக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரின் கையொப்பமிட்ட பிரதியினை வழங்கி கௌரவித்தார்.

 அதே போல், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாண்பமை தலைமை தேர்தல் ஆணையரின் ஒப்பமிட்ட கையெழுத்து பிரதியினை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் 100 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த வாக்காளர்  குடிமக்களிடம் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று பிரதியினை தந்து கௌரவித்தனர்.