பெட்ரோல் பங்க் ஆக்கிரமிப்பை எடுங்க:- இல்லைன்னா சீல் வைப்பேன்! ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கடும் எச்சரிக்கை!

ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டத்தில் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கவும் கழிவுநீர் கால்வாய் வழியாக மழைநீர் செல்லவும் - நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது - வேலூர் மாவட்டத்தில் 75 சதவிகிதம் ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது - மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.
வேலூர் மாவட்டம்,வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி .இ.பி காலனி, திருநகர், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. மற்றும் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சாலைகள் கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்வாயை பெட்ரோல் பங்க் நிறுவனம் மூடியுள்ளது அதனை ஏற்கனவே ஒரு முறை இடித்து எடுக்க உத்தரவிட்டும் அதனை செய்யாததால் மாவட்ட ஆட்சியர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் அதனை இடித்து அகற்றி கால்வாயை தூர்வார வழி வகை செய்ய வேண்டும் இல்லையென்றால் பெட் ரோல் பங்க் சீல் வைக்கபடும் என எச்சரித்தார்.
பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மேயர், துணைமேயர் ஆணையர் கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை காட்பாடி பகுதியில் ஆய்வு செய்தோம்.
சாலைகளை சீரமைக்கவும் கழிவுநீர் வெளியேற்றவும் ஆய்வு செய்துள்ளோம் குப்பைகளையும் அகற்ற கூறியுள்ளோம்.
பழுதான சாலைகளை சீரமைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம் வடகிழக்கு பருவ மழை முன் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
தண்ணீர் தேங்கும் இடங்களில், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் கோட்டை கோவிலினுள் தண்ணீர் செல்லாமல் வெளியேற்ற மோட்டார் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் நேற்று முன் தினம் மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவுறுதல்படி நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மழை பாதிப்பு புகார்களை தெரிவிக்கலாம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பது 24 ஏரிகளில் 60 விழுக்காடு தண்ணீர் இருந்தது தற்போது கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது இதன் மூலம் ஒவ்வொரு ஏரியாக நிரம்பி வருகிறது 75 ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறினார்.