தபால் வாக்கு தில்லு முல்லு! போராட்டம்...!!

தபால் வாக்கு தில்லு முல்லு! போராட்டம்...!!

 ஜி.கே.சேகரன்,

  கே.வி. குப்பம் ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்கு அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 வேலூர் மாவட்டத்தில் 6 ஆம் தேதியான நேற்று நான்கு ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

 இதில் கே வி குப்பம் ஒன்றியமும் ஒன்றாகும் இதனை அடுத்து கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 151  அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்  கடந்த 6-ஆம் தேதி தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

  அவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை என்பதால் சர்ச்சை எழுந்தது.

  குறிப்பாக அங்கன்வாடி பணியாளர்கள் தபால் ஓட்டு போடும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வாக்களிக்கும் படிவத்தினை தேர்தல் அதிகாரி கோபி வழங்கினார்.

  இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர் இந்த சம்பவத்தால் கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.