ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு களேபரம் செய்த மக்கள்!

ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு களேபரம் செய்த மக்கள்!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்டம், கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கரிக்கல் காலனி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் குதித்தனர்.

 இந்த போராட்டத்தில்  ஊராட்சி மன்ற  தலைவர் (நிர்மலா)துணைத் தலைவர் (லீலா )இருவரிடையை கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக தன்னிச்சியாக செயல்படுவதால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று ஆண்டுவகளுக்கு மேலாக குடிநீர், கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு ,சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியவில்லையாம்.

 ஆகவே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் , மக்கள் நல பணியாளருக்கு 13 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும்தலைவருக்கு வேண்டிய பகுதியில் மட்டும் வளர்ச்சி பணிகள் செய்வதாகவும் சில கிராமங்களை எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும் கோஷமிட்டனர்.

 மேளும், கரிக்கல் காலனி பகுதியில் கிராம சபா கூட்டம் நடத்தவில்லை பலமுறை தெரிவித்தும் ஒரு முறை கூட கிராமசபா கூட்டம் நடத்தாத நிர்வாகத்தை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊராட்சி செயலாளர்களை சரியாக பணி செய்யவில்லை எனக்கூறி இதுவரை 9 ஊராட்சி செயலாளர்களை மாற்றியதாகவும் இதில் வெங்கடேசன் என்பவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டதாகும் குரலெழுப்பினர்.

  அதே போல் இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டை பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்க்கு பூட்டு போட்டு கண்டன கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் முறையாக வளர்ச்சிப் பணிக்கு கொண்டு செல்லாத தலைவர் துணைத் தலைவரின் கருத்து வேறுபாடும் மற்றும் செயல்படாத நிர்வாகத்தின் பொறுப்புகளை  கையகப்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடி பார்வையில் ஊராட்சி மன்றம் செயல் படுத்த வேண்டும் வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

  தலைவர் துணைத் தலைவர் ஆகியோரின் பொறுப்புகளை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தும் வரைக்கும் இந்த போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.