அல்லக்கையின் அலேக் அடாவடி! என்னையே கல்லூரியின் அடுத்த முதல்வராக நியமிக்கனும்! இல்லைன்னா ரவுடிகளை அழைத்து வருவேன்!

ஜி.சாந்தகுமார்,
வடக்கு மாவட்டத்தில் நூறு ஆண்டை கடந்து ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அரசு உதவிகளை பெற்று செயல்பட்டு வந்தாலும் கூட, கல்லூரி நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிடாதபடிக்கு பார்த்துக் கொண்டு அனைத்து ஒழுங்கீணங்களையும் அதில் அரங்கேற்றி வருகிறார்கள்.
குறிப்பாக பணி நியமனம், அட்மீஷன் என எல்லாவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்து வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்காலிக முதல்வரின் பணிக்காலம் தற்போது முடிவுக்கு வருகிறது. ஆகவே முதல்வர் பதவிக்கு நியமனம் செய்யப்பட வேண்டும்.
அதற்கு தகுதியான நபரை தேர்வு செய்ய வேண்டிய பணிகளை துவங்கியுள்ளனர்.
கல்லூரிக்கு அப்பாற்பட்ட நிலையில் தகுதியானவர் இருந்தால் கூட பரவாயில்லை, ஏன்னா? இந்த கல்லூரி பழையபடி அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி சூப்பராக இருந்ததோ அந்தபடிக்கு கொண்டு வரக்கூடியவரே அடுத்த முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் அக்கறை காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு மேல் வகுப்பெடுக்கும் அனுபவம் இருக்க வேண்டும், பணியின் போது ஒழுங்கீணங்கள் இருத்தல் கூடாது உள்ளிட்ட பல தகுதிகளை மையமாக பார்க்கிறார்கள்.
ஆனால் இதில் எதுவுமே இல்லாத ஒரு அல்லக்கை என்னைத் தான் கல்லூரிக்கு அடுத்த முதல்வராக நியமிக்க வேண்டும், எனக்கு முதல்வர் பதவியை கொடுக்கவில்லை என்றால் நிதியாளுநர் போஸ்ட்டிங்காவது கொடுக்க வேண்டும். நான் முப்பது லட்சம் செலவு செய்துவிட்டேன். அதை திருப்பி எடுத்துக் கொள்கிறேன், ஏற்கனவே இங்கு அந்த பதவியிலிருந்த தமிழ்துறையைச் சேர்ந்தவர் கடன்காரனாக வந்து இப்படித்தான் செட்டில் ஆனார் என்று அடாவடியாக சொல்லி வருகிறாராம்.
அதே போல், எனக்கு பதவி ஏதும் கொடுக்கவில்லை என்றால் ஆந்திராவிலிருந்து ரவுடிகளை அழைத்து வந்து எல்லோரையும் ஒழித்துக் கட்டிவிடுவேன் என்று தாதா பாணியில் டுபாக்கூர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இந்த டுபாக்கூருக்கு, அரசு பள்ளியில் பணியாற்றும் சில வசூலிஸ்டுகள் சப்பைகட்டு கட்டுகிறார்களாம்.
அரசு துறையில் பணியாற்றுபவர்கள் சாதி மத அடிப்படையிளான நிர்வாகங்களில் பதவி வகிக்கலாம் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இதை சொல்லி ஒரு குறிப்பிட்ட மத நிர்வாகத்துக்குள் புகுந்துக் கொண்டு மேற்படியான நபர்கள் லட்சக்கணக்காக பணம் வசூல் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் வசூல் செய்ய சொல்லி எந்த தீர்ப்பிலும் சொல்லவில்லை. இதை அவர்களுக்கு விரைவில் சுட்டிக்காட்டப்படவுள்ளது தனிக்கதை.
தற்போது இப்படி மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கும் அல்லக்கை ஒரு இல்லீகல் கான்டக்ட் (பொம்பளை சவகாசம்) வைத்துக் கொண்டுள்ளார்.அந்த அம்மையாரும் அதே நிர்வாகத்தில் பணியாற்றுகிறார். அதற்கான உபயமும் நம்ம டுபாக்கூர் தான். இந்தம்மா ஏதோ படிச்சி கிழிசிட்டாங்க என்பதற்காக டுபாக்கூர் பார்ட்டி கல்லூரியில் உள்ள அனைவருக்கும் பிரியாணி போட்டிருக்கிறார்.
நல்ல ருசித்து திண்ற பலர் த்தூ...... மானங்கெட்டவர்களா? கூத்தியாருக்காக இப்படி வெளிப்படையாக பிரியாணி போடுறானே என்று காரி துப்பிவிட்டு வந்தார்களாம்.
இதுல ஹைலைட் என்னவென்றால் இந்த டுப்பாக்கூரின் பொண்டாட்டியும் அதே கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக உள்ளார், அவரை ஆங்கில துறையில் நிரந்தரமாக்க வேண்டும்? இல்லைன்னா கத்தி எடுத்து வெட்டிவிடுவேன் எனவும் ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட டுபாக்கூருக்கு சப்போர்ட் செய்ய நன்றி கெட்ட கும்பல் ஒன்று களம் இறங்கியிருக்கு. அதே போல் இதற்கெல்லாம் முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தில் வைக்கப்பட்டவரை மிரட்டி பணியவைக்கவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர், இவர்கள் மிரட்டலுக்கெல்லாம் பயப்படாமல் நீதி நியாயம் சத்தியம் என செயல்படுபவர் என்பதினால் சாதி சான்று குளறுபடி மற்றும் ஒழுங்கீணம் ஏதும் இல்லாத தகுதியான முதல்வரை நியமிப்பார் அதிலும் நிரந்தரமாக என்பதில் அய்யமில்லை.
குறிப்பு:-
*இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள அல்லக்கை, சமயத்துக்கு தகுந்தார் போல் மதத்தை மாற்றிக் கொண்டதற்கான ஆதாரங்கள் ஏகப்பட்டதாக உள்ளன.
*மாணவர்களை மையப்படுத்தி ஆண்டு தோறும் லட்சக்கணக்காக பணம் சம்பாதித்து வரும் அந்த டுபாக்கூர், அதற்காக டூர் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றை கையில் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது போன்ற ஆசாமிகளை முதல்வராக்கினால் ஏற்கனவே இறுதி கட்டத்திலுள்ள அந்த கல்லூரி தன் மூச்சை நிறுத்திக் கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்படும்.
*அதே போல் மேற்படி கல்லூரி ஒரு பெண் முதல்வரை சந்திக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.