அமைச்சர் பொன் முடியும் மனைவியும் விடுதலை! லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவு செய்து வழக்கு புஸ்வானம் ஆனது

அமைச்சர் பொன் முடியும் மனைவியும் விடுதலை! லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவு செய்து வழக்கு புஸ்வானம் ஆனது

கு.அசோக்,

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் போதிய ஆதரமில்லாததால் விடுவிப்பு வேலூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு !
   உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது  விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கானது   விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது.
  இவ்வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்  இன்று மாவட்ட நீதிமன்றத்தில், அமைச்சர் பொன் முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜரானார்கள்.
அப்பொழுது அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது.   உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி மீது சொத்து குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் தற்போது விடுதலை கிடைத்துள்ளது. இருப்பினும்  அரசு குவாரியிலிருந்து  அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என  உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் மட்டும் விடுதலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.