தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
ஜி.சாந்தகுமார்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது,
-''கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலைக்கு முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சின்ன சேலம் அருகே, பிளஸ் 2 மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து, தவறி விழுந்து இறந்ததாக செய்தி வெளியானது. இறப்பில் மர்மம் உள்ளது என மாணவியின் தாயார் புகார் தெரிவித்துள்ளார். விசாரித்து, அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தெரிவித்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.காவல்துறை, மாவட்ட நிர்வாக அலட்சியத்தாலும், மாணவிக்கு நீதி கிடைக்காததாலும், சம்பந்தப்பட்டவர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டதற்கு முதல்வரே முழு பொறுப்பு.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. மாணவியர் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
காவல் துறை செயல் இழந்துள்ளது. காவல் துறை துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால், அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
கடலூர் மாவட்டத்தில், பள்ளி மாணவியை நான்கு பேர் பாலியல் வன்முறை செய்துள்ளனர். மாணவி மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை போக்காததால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., சொன்னதை செய்தது கிடையாது. முதல்வரும், அவரது மகனும், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'நீட்' தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து என்றனர். எதையும் செய்யவில்லை. பல உயிர்கள் போனதுதான் மிச்சம்.இவ்வாறு பழனிசாமி கூறினார்.