ஆர்.டி.ஓ. ஆபிசுக்குள் சொல்லாமல் நுழைந்த கலெக்டர்!

 ஆர்.டி.ஓ. ஆபிசுக்குள் சொல்லாமல் நுழைந்த கலெக்டர்!

ம.பா.கெஜராஜ்,

 வட்டார போக்குவரத்து அலுவலகமான ஆர்.டி.ஓ. ஆபிசுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கலெக்டர் நுழைந்து ஆய்வு நடத்தினார்.

 வேலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., இவர் இன்று காலை சத்துவாச்சாரி பகுதியில் உள்ள செஞ்சிலுவை சங்கம், மற்றும் மாநகராட்சி மண்டலம் 2 க்குட்பட்ட்ட பூசாரி என்கிற இடத்திலுள்ள திடக்கழிவு மேலாண்மை மையம் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  இதற்காக கலெக்டர் சத்துவாச்சாரிக்கு வந்த போது திடீரென்று ஆர்.டி.ஓ.அலுவலகத்துக்குள் நுழைந்தார். அங்கு வாகனம் ஓட்ட லைசன்சு வழங்கும் சோதனையை பிரேக் இன்ஸ்பெக்டர் சகிதமாக மேற்கொண்டிருந்தனர்.

  அப்போது அங்கு லைசென்சு கேட்டு விண்ணப்பித்திருந்த இளைஞர் வாகனம் ஓட்ட தயாராக இருந்த நிலையில், அவரை அழைத்த கலெக்டர் வண்டியை ஓட்டி காட்டச் சொல்லி சோதனை செய்தார்.

அப்போது அந்த இளைஞர் வண்டியை ஓட்டிக்காட்டியதும் குட் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

  கலெக்டரின் ஆய்வின் போது போக்குவரத்து துணை ஆணையர் இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் மற்றும் நேர்முக உதவியாளர் யுவராஜ், பிரேக் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் உடன் இணைந்தனர்.