சூப்பர் ஸ்பெஷாலிட்டியோடு உருவெடுக்கும் பென்ட்லென்ட் ஆஸ்பத்திரி! சுகாதார துறை செயலாளர் பேட்டி!

சூப்பர் ஸ்பெஷாலிட்டியோடு உருவெடுக்கும் பென்ட்லென்ட் ஆஸ்பத்திரி! சுகாதார துறை செயலாளர் பேட்டி!

  ஜி.கே.சேகரன்,

 டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - மக்கள் டெங்கு குறித்து விழிப்புணர்வு அடைந்து தொடர்ந்து காய்ச்சல் இருக்குமானால் ரத்த பரிசோதனை செய்து டெங்கு காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வேண்டும் - தமிழகத்தில் தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு வார்டுகள் அமைப்பு - சூப்பர் ஸ்பெஷாலிட்டியோடு உருவெடுக்கும் பென்ட்லென்ட் ஆஸ்பத்திரி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து பின் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அவர்கள் பேட்டி,

 வேலூர்மாவட்டம், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நேற்று நவ-13  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அவருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாப்பாத்தியம்மாள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

   பின்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில், வேலூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை என்பது அனைத்து வசதிகளுடனும் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்படும். டெங்கு 2023 ஆம் ஆண்டு அதிகமாக உள்ளது டெங்கு காய்ச்சல் என்பது அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மக்கள் வீடுகளில் மழைநீர் மற்றும்பிரிட்ஜ் பின்புறம் நல்ல தண்ணீரை தேக்கி வைக்க கூடாது டெங்குகாய்ச்சலுக்காக காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

   மக்கள் தாங்களே காய்ச்சல் வந்தால் மருந்து எடுத்துகொள்ளாமல் மருத்துவரை அனுக வேண்டும். இந்த முகாம்களின் நோக்கம் என்ன என்றால் ரத்த பரிசோதனை செய்து முகாம்களில் டெங்கு நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சைகளும் அளிக்கபட்டு வருகிறது.

  அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கொசுவலைகள் போடப்பட்டு அந்த வார்டுகள் தனி வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பட்டாசு வெடித்து காயம் அடைந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் அங்கு இல்லை என்ற புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.விசாரணையின் முடிவுக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கபடும்.

    தாய் சேய் இறப்பு விகிதம் என்பது இந்திய அளவில் தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது, தாய் சேய் நல பிரிவு தனியாக அரசு மருத்துவமனைகளில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாய் சேய் இறப்பு மிகவும் குறைவு அதனை இல்லாமல் செய்து அனைத்து தாய் சேய்களையும் நல்ல முறையில் காப்பாற்ற சிறப்பு பிரிவுகளும் தற்போது செயல்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சொன்னார்.