அரசு தளவாடப் பொருட்களை தருவதில்லை:- மின் நுகர்வோரை வாங்கி தர கெஞ்சுகிறோம்! பொதுச்செயலாளர் பேட்டி

ஜி.கே.சேகரன்,
மின் வாரியத்தில், அரசு தடவாள பொருட்களை தருவதில்லை ஆகவே மின் நுகர்வோரை வாங்கி தர கெஞ்சுகிறோம் இங்குதான் லஞ்சம் உருவாகிறது என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் பேட்டியில் சொன்னார்.
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 38 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக புதிய மின் துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - மின்சார வாரியத்திற்கு தேவையான தடவாள பொருட்களை வாரியம் உடனடியாக கொள்முதல் செய்து தர வேண்டும் இதனால் தான் நாங்கள் நுகர்வோரிடம் கையேந்தும் நிலையில் உள்ளோம் - தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் சுப்பிரமணி வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் கூட்டம் கிஷோர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில பொதுசெயலாளர் சுப்பிரமணி, மாநில பொருளாளர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் சுந்தர்ராஜன், அக்னிக் பாலாக், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு வழக்கு சம்பந்தமாக நடவடிக்கைகளை துரித படுத்த அடிப்படை சம்பளம் பெற்று தருமாறு கோருவது.
களப்பணியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நிர்வாகம் மிகவும் ஆட்கள் பற்றாக்குறையால் தவிக்கிறது எனவே காலி பணியிடங்களை நிரப்பவும் தடவாள பொருட்களை இன்னல் இல்லாமல் பணி செய்ய பெற்றுதர வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடரவும் தொழிலாளர்களுக்கு பணியின் போது வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை மின்வாரியம் வழங்க வேண்டும்.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இதர சலுகைகளை அரசு திருப்பி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மாநில பொதுசெயலாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மின்சார வாரியத்தில் 38 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது இதனால் நாங்கள் பொதுமக்களின் புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையும் காலதாமமும் ஏற்படுகிறது.
இதனால் தமிழக அரசு போர்கால அடிப்படையில் உடனடியாக காலிபணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் தடவாள சாமான்களை கொள்முதல் செய்து தருவதில்லை, இதனால் ஒரு கிளாம்ப் உட்பட அனைத்து பொருட்களையும் மின் நுகர்வோரை வாங்கி தர கெஞ்சுகிறோம்.
இங்கு தான் ஊழலே ஆரம்பிக்கிறது மேலும் தேவைக்கு அதிகமாக டிரான்ஸ்பார்மர்களை வாங்கி குவித்து வைத்துள்ளோம் ஆனால் மற்ற சாமான்கள் இல்லை.
புதியதாக பொறுப்பேற்றுள்ள மின் துறை அமைச்சர் இதில் கவணம் செலுத்தி இவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.