மாமியார் உடைத்தால் மண்சட்டி! மருமகள் உடைத்தால் பொன்சட்டியா!

மாமியார் உடைத்தால் மண்சட்டி! மருமகள் உடைத்தால் பொன்சட்டியா!

 ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடியில் ஏரி கால்வாய் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக  ஆக்கிரமிதது கட்டப்பட்டுள்ள குடியிருப்பு களை வருவாய்த்துறை மற்றும் நகராட்சிதுறையினர்  அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.வீடுகளை இழந்து பொதுமக்கள் தவிப்பதால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது100 க்கும் மேற்பட்ட போலீசாரின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரம்

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோவிந்தபுரம் பகுதியில் உள்ள சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  ஏரியிலிருந்து உபரி நீர்  பாலாற்றுக்கு செல்லும் சுமார் 13 அடி அகலம் கொண்ட  ஏரிக்கால்வாய் நூருல்லாப்பேட்டை பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்   ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு அங்கன்வாடி  கட்டிடம் உட்பட 49  வீடுகள் கட்டப்பட்டு அங்கு 50  ஆண்டுகளுக்கு மேலாக  மக்கள் வசித்து வருகின்றனர்.

  இந்நிலையில் கடந்த மழையில் இந்த ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் வெள்ளம் சென்று அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால்  மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் அவதிப்பட்டனர்.

  இதனால் தற்போது பெய்து வரும் மழையால் வேறு எந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும்,நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு அகற்றி கொள்ள வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

  ஆனால் அவர்கள் இதுவரை வீடுகளை அகற்றாததால்  இரண்டு நாட்களுக்கு முன்பு அவற்றை அகற்ற சென்றவருவாய்த்துறையினரை  ஆக்கிரமிப்பாளர்கள் சாலை மறியல் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்து நிறுத்தி  அதிகாரிகளை விரட்டினர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான 100க்கு மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி ஆண்ணையளர் மாரி செல்வி தலைமையிலான நகராட்சி பணியாளர்கள்  ஆகியோர் இன்று அதிரடியாக இறங்கிய போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

   அந்த எதிர்பையும் சமாளித்து  ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டது.இப்பணிகள் இன்று ஒரே நாளில் அனைத்தையும் அகற்றி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இழந்து தவிக்கும் அப்பகுதி மக்கள் மாற்று இடம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

   இந்த சமூகத்தில் ஆயிரக்கனக்கான அரசியல் அல்லாத விஐபிகள் அதிகாரிகளுக்கு புரோக்கர் பணிகளை செய்து நீரி நிலைகளை ஆக்கிரமித்து அனுபவவித்து வருகிறார்கள்.

  என்ன செய்வது, மாமியார் உடைத்தால் மண்சட்டி! மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?