அழிக்கப்பட்டு வரும் கள்ளச் சாராய சாம்ராஜ்யம்!

ம.பா.கெஜராஜ்
வேலூர் சரகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கூறப்படுவதுண்டு. அந்த வகையில் சில சக்கரவர்திகள் இந்த சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் கள்ளசாராயம் அழிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என்.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.பாஸ்கரன், (தலைமையகம்) அவர்கள் மற்றும் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருநாவுக்கரசு, வேலூர் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு, கீ.வ.குப்பம், குடியாத்தம் தாலுக்கா, மேல்பாடி மற்றும் பரதராமி காவல் ஆய்வாளர்களின் கொண்ட போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், சுமார் 412 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட தனிப்படை போலீசார் அணைக்கட்டு அல்லேரி மலை மீது ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி சோதனை செய்தனர்.
அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் 20 குழுக்களாக பிரிந்து மதுவிலக்கு சம்பந்தமான திடீர் தேடுதல் வேட்டை நடத்தயதில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 3050 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் 870 லிட்டர் நாட்டுச் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
அதே போல், சட்ட விரோதமாக விற்கப்பட இருந்த 18 மதுபான பாட்டில்களை கைப்பற்றியும், கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சரக எச்சரித்துள்ள நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
இராணிப்பேட்டை மாவட்டம்.
மாநிலம் முழுவதும் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, மாநில குற்ற ஆவணக் காப்பகத்தால் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வழங்கட்டட்ட 6.8,00,000 மதிப்பிலான போக்குவரத்து தடுப்பாண்கள் - 48 மற்றும் சோலார் போக்குவரத்து தடுப்பாண்கள் 18 மொத்தம் - 66 போக்குவரத்து தடுப்பாண்கள் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V..கிரண் ஸ்ருதி., இ.கா.ப அவர்களால் வழங்கப்பட்டது.
அவை மாவட்டத்தில் உள்ள 1)சீக்கராஜாபுரம் சோதனைச் சாவடி-7, 2) அரும்பாக்கம் சோதனைச் சாவடி-4. 3)தாமரைப்பாக்கம் சோதனைச் சாவடி-6, 4)அரப்பாக்கம் சோதனைச் சாவடி-8. 5)சில்வர்பேட்டை சோதனைச் சாவடி-7, 6)ரெட்டைகுளம் சோதனைச் சாவடி-8. 7)புதுகேசவபுரம் சோதனைச் சாவடி-6, 8)பள்ளூர் சோதனைச் சாவடி-6, 9)பிள்ளஞ்சி சோதனைச் சாவடி-6 10) பொன்னியம்மன் பட்டரை சோதனைச் சாவடி-8 என மொத்தம் பத்து சோதனைச் சாவடிகளுக்கு சமந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களிடம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.விசுவேசுவரய்யா (தலைமையிடம்) மற்றும் திரு.குமார் (இணையவழி குற்றப்பிரிவு), துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிசந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு), காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
காவல் கண்காணிப்பாளருக்காக, இராணிப்பேட்டை மாவட்டம்.