கோலாகல திறப்பு விழாவுக்கு தயாராகும் கலைஞர் கோட்டம்! முதல்வரின் திடீர் ஆய்வு!

கோலாகல திறப்பு விழாவுக்கு தயாராகும் கலைஞர் கோட்டம்! முதல்வரின் திடீர் ஆய்வு!

  க.பாலகுரு,

 நாளை கோலாகல விழாவுடன் துவங்கும் கலைஞர் கோட்ட நிகழ்சிகளையும், கட்டுமானம் முடிந்த பகுதிகளையும் முதலமைசர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

ஆறு தூர் வாரும் பணியை ஆய்வு.

திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள ஒடம் போக்கி ஆறு தூர் வாரும் பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் என்று ஆய்வு நடத்தினார்.

 மேட்டூர் அணை பாசனத்திற்காக கடந்த 12 ஆம்தேதி திறக்கப்பட்ட நிலையில், அந்த நீர் கல்லணைக்கு வந்து சேர்ந்தது.

இதை தொடர்ந்து கல்லணையும் பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

 இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைவரை சென்றடையும் வகையில் ஆறுகள், பாசன வாய்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணியானது துவங்கி முடவடையும் நிலையில் உள்ளது.

 அதில் திருவாரூர் நகரின் நடுவே செல்லும் ஆறான ஓடம்போக்கி ஆற்றில் கரை பகுதிகளில் மண் சரிவு, மற்றும் ஆகாய தாமரை செடிகளால் தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்தது.

 இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 10 லட்சம் செலவில் கரையை பலப்படுத்துதல், கரைபகுதிகளில் ஆற்றில் மண் அகற்றுதல், ஆகாய தாமரைசெடி அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை தமிழமுதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு,டிஆர்பி.ராஜா,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

ஆற்றில் நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இ.ஆ.ப.மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

 கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்து வைக்கிறார்.

  மேலும் திருவாரூர் அருகே காட்டூரில்  கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை நாளை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்து வைக்க உள்ள நிலையில் அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

 திருவாரூர் அருகே காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

  மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.  இந்த கலைஞர் கோட்டத்தை நாளை 20-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி திறந்து வைக்க உள்ளனர்

   இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து கவியரங்கம், சாலமன் பாப்பையா பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

  இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய தலைவர்கள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்க உள்ளனர்

 நிகழ்ச்சி நடைபெற உள்ள பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், இ.கா.ப.அவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.