"வெதர்" பார்க்கும் கருவி தான் வானிலிருந்து விழுந்தது! பொதுமக்களே பயப்படாதீங்க என்கிறார் எஸ்.பி.!

"வெதர்" பார்க்கும் கருவி தான் வானிலிருந்து விழுந்தது! பொதுமக்களே பயப்படாதீங்க என்கிறார் எஸ்.பி.!

 த.நெல்சன்,

 வானிலிருந்து விழுந்தது வெதர் பார்க்கும் கருவி தான், அதனால் எந்த பாதிப்பும் வராது. ஆகவே பொதுமக்களே பயப்படாதீங்க என்று எஸ்.பி.அறிவித்துள்ளார்.

  வேலூர் மாவட்டம், குடியாத்தம், லிங்குன்றம் பகுதியில் விழுந்த மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.என்.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் குடியாத்தம் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தை தொடர்பு கொண்டார்.

  இக்கருவியானது சென்னை வானிலை ஆய்வு மையத்தினால் தினந்தோறும் வானிலையை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் சிறிய வகை பலூனுடன் கூடிய கருவியாகும்.

   இவ்வகை கருவிகள் சிறிய பறக்கும் பலூன்கள் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். மேலும் இது தானாகவே செயலிழந்து விடும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தனர்.

  எனவே இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது   

  குறிப்பு:- நேற்று இரவு 7 மணியளவில் இதையடுத்து, அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை போலீசார் பத்திரமாக சேகரித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வானிலிருந்து மர்ம பொருள் விழுந்ததால் குடியாத்தம் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.