காவல் துறையினர் மற்றும் பிடிஓவை எதிர்த்து திமுக வழக்கறிஞர் ஆர்பாட்டம்!

காவல் துறையினர் மற்றும் பிடிஓவை எதிர்த்து திமுக வழக்கறிஞர் ஆர்பாட்டம்!

  ஜி.கே.சேகரன்,   

 ஊழலுக்கு துணை போவதாக, வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கருப்பு கொடி தர்ணா போராட்டம் நடந்தது.

 திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் மற்றும்  சுமார் 20க்கும் மேற்பட்டோருடன் ஊழலுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் தன் மீது கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கருப்பு  கொடி பிடித்து அமைதி போராட்டம் நடத்தினர்.

 அப்போது அவர் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சாலை போடுகிறார்கள். முறையற்ற வகையில் சுமார் 100 பேருக்கும் மேலாக இலவச வீடுகள் கட்டிக் கொடுத்ததாக போலி பில்கள் போட்டு ஊழல் செய்ததாக கூறப்படுகிறது.

 100 நாள் வேலை திட்டத்தில் 100 பேருக்கு மேல் போலி அட்டைகள் தயாரித்து பில் போடுவதாக கூறப்படுகிறது. கவுண்டப்பனூர் செம்மன் குழி மேடு செல்லும் சாலையை எட்டு மாதத்திற்கு முன்பு தோன்டி அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

 இது போன்ற பல்வேறு  பிரச்சினைகள் குறித்து துறை சார்ந்த அனைவருக்கும் மனு கொடுத்து விட்டோம் ஆனால் நடவடிக்கை இல்லை.

 மேலும் திருப்பத்தூ£,¢ தருமபுரி நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வரைச்சென்று உத்தரவு வாங்கியும் அதை அமல்படுத்தாமல் அரசுக்கு தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்கள்.

 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வந்து எந்த பணி ஆணை எவ்வளவு தொகைக்கு விடப்பட்டுள்ளது என்கிற தகவலை கேட்டால் எதுவும் தெரியாது என்கிறார்கள்.

 இது போன்று பல ஊழல்களுக்கு  வட்டார வளர்ச்சி அலுவலர் துணை போவதை தடுக்க வேண்டும்.

 அதே போல் கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர சுப்பிரமணி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 தர்ணா பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆடி அசைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீம் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

 குறிப்பு:- மேற்படி போராட்டம் நடத்திய வழக்கறிஞர் சரவணன், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில்  காலை பத்து மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

 குறிப்பாக, தளபதியின் தலைமையில் உள்ள சிறந்த ஆட்சியில் வருவாய்த்துறை காவல் துறையினர் சிலர் சட்டவிரோத செயல்களுக்கு துணை சென்று ஆட்சியின் பெயரை கெடுக்கிறார்கள்.

 கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், எதிர்க்கட்சி உடன் கைகோர்த்து அவர்களின் சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கிறார்.

 ஆகவே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் ஆகியோருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தளபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புக் கொடியுடன் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று வாட்ஸாப்பில் வெளியிட்டிருந்தார்.

 இதை தெரிந்தும் டிஎஸ்பி சாந்தலிங்கம் போராட்டம் நடக்கும் அளவுக்கு வேடிக்கை மட்டுமே பார்த்தார்.