கபாலிஸ்வரர் கோவிலில் மயில் அபேஸ் கேஸ்!

ஜி.சாந்தகுமார்,
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக கூறி ரங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் இருந்ததாகவும், 2014ம் ஆண்டு குடமுழுக்கின் போது, இச்சிலை மாற்றப்பட்டு, அலகில் பாம்பு உள்ள மயில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆகம விதிகளுக்கு முரணானது என அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் கோவில்களின் ஆகமம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி, அந்த குழு, இந்த மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா என்பதை முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.