ராணுவ வீரரை கொலை செய்த போலிஸ்! திமுக கவுன்சிலர்- மாணவன் உட்பட9 பேர் கைது!

உ.சசிகுமார்,
ராணுவ வீரரை கொலை செய்த குற்றத்துக்காக பேரூராட்சி திமுக கவுன்சிலர், ஒரு போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலிஸ்தரப்பில் கூறப்படுவதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன். அவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் பிரபு ஆவர்.
இதில் பிரபாகரனும், அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி திமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
அப்படியிருக்க கடந்த 8ஆம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி இது குடிநீர் இதில் ஏன் துணி துவைக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பிரபாகரன் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் போதே அங்கு வந்த பிரபாகரனின் தாய் எதோ சொல்ல, சின்னசாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .
இந்நிலையில் அன்று மாலை கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி குணாநிதி ராஜபாண்டியன் அங்கு வந்து பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு மற்றும் தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் தாக்கினர்.
மேற்படி தாக்குதலில் 3 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி மற்றும் மணிகண்டன் மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன் ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு இறந்துவிட்டார்.
பின்னர் தலைமறைவாக இருந்த குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன்,வேடியப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் குருசூர்யமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். குணாநிதி கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளோம் என்று போலீஸார் சொன்னார்கள்.