ஆரணி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்! கூட்டு சேர்ந்து மறைக்க முயற்சி!

ம.முருகன்,

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள வடுகஞ்சாத்து அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் அதை மூடி மறைக்க மருத்துவ உதவிகளை நாடியிருக்கிறார்.

  இந்த சம்பவம் தொடர்பாக ஊர் தலைவர்களுக்கு தெரியவர அந்த தலைமை ஆசிரியரை அழைத்து கழுத்து மீது நாலு போடு போட்டு மிரட்டி அனுப்பினராம்?

  பின்னர் இது குறித்து கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

 மாறாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை வரவழைத்து மிரட்டியிருக்கிறார்கள்.

 இதையெல்லாம் அறிந்துவுடன் பாய்ந்து சென்ற ஊடகவியலாளர்கள் ஓடிய வேகத்தில் மூச்சிரைத்து பின் "வாங்கி" விட்டனராம்.

 தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஒரு ஊடகத்தை நம்பி பேட்டிகொடுத்த நிலையில், அந்தம்மா வீடே தற்போது பூட்டிக்கிடக்குதாம்.

 ஆக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாரா? மூடி மறைத்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் மூடி மறைத்தனரா? என்று விணாக்கள் எழுந்துக் கொண்டிருக்கின்றன.

 இது குறித்து ஆரணி சப்டிவிஷன் காவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை, அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் பெயர் விநாயகமாம். அவரிடம் இதை மூடி மறைக்க கூட்டு சேர்ந்து கறந்துவிட்டனராம்.

  உயர் போலிஸ் அதிகாரிகள் ஆரணி தாலுக்கா காவல் நிலையத்தின் மீது தனி கவனம் செலுத்தினால் நலம்.