ஏ.டி.எம்.கொள்ளை குற்றவாளிகளுடன் ஹரியானா காவல் துறையினர் தொடர்பு:-ஐ.ஜி.கண்ணன் பரபரப்பு பேட்டி!

ச.பா.
ஏ.டி.எம். குற்றவாளிகளுடன் ஹரியானா காவல் துறையினர் சிலர் தொடர்பில் இருப்பதால் அந்த பகுதி தனிப்படைக்கு சவால் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூன்று மாநிலங்களில் 10 நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, ஒருவர் பிடிபட்டிருக்கிறார்.
இந்நிலையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் இ.கா.ப.அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,
அப்போது அவர் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கோலார், குஜராத், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களில் 10 நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையர்கள் கோலாரில் இருந்து பெங்களூர் வழியாக விமானத்தில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், இன்னும் சில தினங்களில் இந்த கொள்ளை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்.
குறிப்பாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கோலார் பகுதியில் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், குஜராத் பகுதியில் வேலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா, ஹரியானா மாநிலத்தில் திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான தனிப்படைகள் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஹரியானா பகுதியில் உள்ள மேவாக் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாக இருப்பதால் காவல்துறையினருக்கு சவாலாக உள்ளது. குற்றவாளிகளுடன் ஹரியானா காவல் துறையினும் தொடர்பில் இருப்பதால் அந்த பகுதி தனிப்படைக்கு சவால் விடும் அளவில் உள்ளது.
கொள்ளையர்கள் கோலார் பகுதியில் தங்கியிருந்து திருவண்ணாமலை பகுதியை நோட்டமிட்டு கொள்ளையடித்து சென்று உள்ளதாக தெரிகிறது என்று செய்தியாளர்களிடம் சொன்னார்.