உல்லாச பயணம் சென்ற மாணவிகளின் கார் மோதி மூன்று மாணவர்கள் பலி!

உல்லாச பயணம் சென்ற மாணவிகளின் கார் மோதி மூன்று மாணவர்கள் பலி!

 நூ.அ.தபு,

   வாணியம்பாடி அருகே சைக்கிளில் சென்ற அரசு பள்ளி குழந்தைகள் மூவர் மீது கார் மோதி விபத்து. சம்பவ இடத்தில் பலி. உல்லாசத்துக்கு சென்ற காட்பாடியில் உள்ள தனியார் பல்கலை மாணவிகளால் ஏற்பட்ட விபரீதம், அமைச்சர் எ.வ.வேலு நிவாரண உதவி வழங்கினார்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் -8 ஆம் வகுப்பு மாணவன், அவரது சகோதரர் சூர்யா 6 ஆம் வகுப்பு மாணவன், இருவரும் ஒரு மிதி வண்டியிலும் அதே பகுதியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரபீக் ஒரு தனி மிதிவண்டியிலும், அவர்கள் படிக்கும் கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றனர்.

  அப்போது வேலூர் காட்பாடியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மூன்று மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் காரில் ஏலகிரி மலைக்கு உல்லாச பயணம் சென்றனர். அந்த காரை மாணவன் சந்தோஷ என்பவர் ஓட்டி சென்றார்.

   அப்போது கார் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு அருகில் வந்து கொண்டு இருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் உள்ள தடுப்பு மீது மோதி சர்விஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மாணவர்களின் மிதி வண்டிகளின் மீது மோதியது.

  இதில் மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்தில் பலியானர்.

  சம்பவம் நடந்த இடத்தில் கூடிய பகுதி மக்கள் கார் ஓட்டுநரான மாணவன் சந்தோஷ் என்பவரை சரமாரியாக தாக்கினர். மாணவிகள் உட்பட வாகனத்தில் உடன் வந்தவர் ஆறு பேர் எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய காவல்துறையினர் 3 மாணவர்களின்

உடல்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பகுதி மக்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரசத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

  தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், டி ஐ ஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர்.

   விபத்து குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த மாணவன் சந்தோஷ என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   சம்பவம் அறிந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை மாவட்ட செயலாளர் தேவராஜி மூலமாக வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது நகர கழக செயலாளர் சாரதி குமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

   பள்ளிக்குச் மாணவர்கள் 3 பேர் கார் மோதி விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராம மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 குறிப்பு: விபத்துக்கு காரணமான அந்த காரில், உல்லாச பயணத்துக்காக சென்ற காட்பாடி பல்கலையின் மாணவிகள் குறித்த விவரங்களை வெளியில் கசியாமல் பாதுகாப்பதில் போலிசார் ரொம்பவே அக்கரை காட்டினர்.