ஆறு கிராமங்களை தத்தெடுத்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்!

க.பாலகுரு,
திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 7 வது பட்டமளிப்பு விழாவில் 917 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தின் மூலம் 6 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு முன்மாதிரி கிராமங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் 7 வது பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார்.
திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 7 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இளங்கலை, முதுகலை, முனைவர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டம் பெற்ற 917 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. பத்மநாதன் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார் .இதில் 36 மாணவ மாணவிகள் தங்க பதக்கம் பெற்றனர்.
விழாவின் போது கல்லூரி துணை வேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், உன்னத பாரத அபியான் திட்டத்தின் கீழ் இதுவரை மத்திய பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள ஆறு கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு முன்மாதிரி கிராமங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இக்கிராமங்களில் சோலார் விளக்குகள்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலை வசதிகள், தொழில் முனைவதற்கான பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை மக்களுக்கு தொடர்ந்து மத்திய பல்கலைக்கழகத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் சர்வதேச மைய மரபணு பொய் பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் ரமேஷ் வி சோண்டி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பதிவாளர் சுலோச்சனா, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பேராசிரியர் வேல்முருகன், மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.