காஞ்சி காமாட்சி என்கிற பெண் 5 கோடி மோசடி!

ம.பா.கெஜராஜ்,
பங்கு சந்தை பிசினஸ் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியிலுள்ள ரயில் நகர் 7-ஆவது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி. இவர், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் மோசடி புகார் ஒன்றை கொடுத்தார்.
சிவசங்கரி அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, எதிர் வீட்டில் வசிக்கும் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதி, மாமனார் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து காஞ்சிபுரம் அப்போலோ, எல் & டி, ஹிந்துஸ்தான், IFS போன்ற பல்வேறு பங்கு சந்தைகளில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பதாகவும், நானும் என் கணவரும் இவர்கள் மூலம் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் எங்களுக்கு கிடைக்கின்றது என்று சொல்லி எங்களிடம் பணம் கேட்டனர்.
மேற்கண்ட நபர்கள் அனைவரும் சேர்ந்து என் வீட்டிற்க்கு அடிக்கடி நேரில் வந்து பேசி நானும் எனது கணவரும் நம்பும் வகையில் அவர்கள் பங்கு சந்தை மூலம் தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பது போல் அது தொடர்பான விளம்பரங்கள் செய்திகளை எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி ஆசையை தூண்டி எங்களை நம்ப வைத்தனர்.
நாங்கள் முதலீடு செய்யும் முன்பணம் 100% பாதுகாப்பானது எனவும் முன் பணத்தைத் திருப்பி கிடைக்க வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு சொன்னால் போதும் திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்த அவர்கள் 10% லாபம் தருவதாகவும் சொன்னார்கள்.
காமாட்சி குடும்பம் என் எதிர் வீட்டில் குடியிருந்ததால் முதலீடு பணத்தை காமாட்சி மற்றும் அவரது குடும்பத்தார் சொல்லும் வங்கி கணக்கிற்கு கொடுக்குமாறு கூறியதால் இவர்களின் பேச்சை நானும் என் கணவரும் முழுமையாக நம்பினோம்.
அதன் பேரில் பகுதி பகுதியாக, ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொடுத்தோம்.
பின்னர், காமட்சி, விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மீது சிவசங்கரி குடும்பத்திற்கு சிறிது சந்தேகம் எழுந்ததால் இவர்கள் செலுத்திய முன் பணம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.அதற்கு அவர்கள் பணம் திருப்பி கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய காமாட்சி குடும்பத்தினர் பணம் திருப்பித் தருவதாக கூறி ஐகோட் மகாராஜன் என்பவரின் பெயரில் ஆவணம் மற்றும் காசோலை கொடுத்தனர்.
சிவசங்கரி காமட்சி மற்றும் விக்னேஷ்வரன் வங்கி கணக்கில் பணம் செலுத்திய நிலையில் சம்மந்தமே இல்லாத நபரான ஐகோட் மகாராஜன் பெயரில் காசோலை கொடுத்ததால் சந்தேகம் ஏற்பட்டு பணத்தை உங்களிடம் தான் கொடுத்தேன் ஐகோட் மகராஜன் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று சொன்னதற்கு ஐகோர்ட் மகாராஜன் எங்களுடைய பிசினிஸ் பார்ட்னர் என்று அவர்கள் கூறியதாக தெரிவித்தனர்.
பங்கு சந்தை டிரேடிங் என்று பொய் சொல்லி முதலீடாக பெற்ற பல கோடி பணத்தை எல்லாம் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் இயங்கிவரும் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சர்வீஸ் மற்றும் வேறு சில நிறுவனங்களில் காமாட்சி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விக்னேஸ்வரன் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரின் பெயரில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த நான் விசாரித்த போது எங்கள் பணத்தை காமாட்சி மோசடி செய்திருப்பது புரிந்தது.
மேலும், பல்வேறு இடங்களில் இவர்களுடைய பெயர்களில் சொத்துக்கள் ஆடம்பர கார்கள் மற்றம் தங்க நகைகள் வாங்கி வைத்துக்கொண்டு சிவசங்கரியை போன்று பலரை ஏமாற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தாங்க என புகாரில் தெரிவித்திருந்தார்.
பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாக கூறி பொதுமக்கள் நம்பும் வகையில் பல பொய்யான விஷயங்களை சொல்லி நம்ப வைத்து பலரை ஏமாற்றி சுமார் 5 கோடி மோசடி செய்துள்ள காமாட்சி, கார்த்திகேயன், விக்னேஸ்வரன். இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு ஐகோட் மகாராஜன், பத்ரகாளிமுத்து, புவனேஸ்வரி, மகேஸ்வரி, ஜெகநாதன், ஆகியோர் மீது தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் 403, 406, 420, 465, 34 வீஜீநீ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிசார் செய்து வருகிறார்கள்.
புகாரின் பலனாக காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.