வனவிலங்கு பாதுகாப்பு பேரணி! 3 லட்சம் மரகன்றுகள் நட்டுள்ள அதிகாரி!

ஜே.ஜே.எம்.ரபிக் ராஜா,
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி வனத்துறை அதிகாரி ஏசிஎப் சக்திவேல் அவர்கள் தலைமையிலும் தேவதானப்பட்டி வனச்சரகர் திரு டேவிட் ராஜன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
பெரியகுளம் டிஎஸ்பி கீதா மற்றும் இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
இப்பேரணியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா.¢
வன விலங்குகள் மற்றும் இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாக கிடைக்கப்பெற்ற அறிய வகை தாவரங்கள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த குடிநீர் போன்றவற்றை பற்றியும் அதனை பாதுகாக்கும் முறையைப் பற்றியும் மனிதர்கள் உயிர் வாழ இவைகள் அனைத்தும் எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் வனத்துறை அதிகாரி( ஏசிஎப் )சக்திவேல் அவர்கள் விலக்கிக் கூறினார்.
வனத்துறை அதிகாரி டேவிட் ராஜன் அவர்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகப்படியான மரக்கன்றுகளை வைத்து அதை பாதுகாப்பது குறித்தும் ஏசிஎப் பாராட்டினார்.