சென்னை டு அரக்கோணம் ரூட்டில் 14 எலக்ட்ரிக் டிரெயின்கள் ரத்து!

சென்னை டு அரக்கோணம் ரூட்டில் 14 எலக்ட்ரிக் டிரெயின்கள் ரத்து!

 ஜி.சாந்தகுமார்,

   சென்னை டு அரக்கோணம் இன்று 07.10.2023 இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணி வரையில் 14 எலக்ட்ரிக் டிரெயின்கள் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

 இந்த வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், மூர்மார்க்கெட்டிலிலுள்ள சபார்பன் நிலையத்திருந்து இன்று இரவு 10.35 மணிக்கு பட்டாபிராம் புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து இரவு 11.30, 11.45 மணிக்கு ஆவடிசெல்லும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

   மூர்மார்க்கெட் சபார்பன் நிலையத்திருந்து  இரவு 11.30, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

 மேலும் மூர்மார்க்கெட் சபார்பன் நிலையத்திருந்து நாளை காலை 4.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்க  காலை 4.30 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட் சபார்பன் நிலையத்திருந்து அரக்கோணத்துக்கு 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

  இந்த தகவலை தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது