பழைய ஓய்வு ஊதியத்தை வழங்கு!

பழைய ஓய்வு ஊதியத்தை வழங்கு!

க.பாலகுரு,

 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 புதிய ஓய்வூதியத்திணை ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வு ஊதியத்தை வழங்கிட வேண்டாம், மறுக்கப்படும் அகவிலைப்படி, முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனடியாக வழங்கி  வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்துவிடும் அரசாணை 152 ரத்து செய்திட வேண்டும்,

 தமிழக அரசின் காலை சிற்றுண்டித் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமல்படுத்தி அரசு துறைகளில் ஒப்பந்தம் தினக்கூலி அவுட்சோசிங் முறைகளை ரத்து செய்து காலம் முறை ஊதியத்தில் உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் ஏ,பி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன்,மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் உ.சண்முகம் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம்,தம்பிதுரை,தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.