படிப்பதுடன் நின்றுவிடாதீர்கள்!கனிமொழி எம்.பி.பேச்சு!

படிப்பதுடன் நின்றுவிடாதீர்கள்!கனிமொழி எம்.பி.பேச்சு!

  ஜி.கே.சேகரன்!

காலபருவ நிலை மாற்றம் சவால்கள் நிறைந்துள்ளது அதனை மாணவர்கள் தீர்க்க வேண்டும் - தேவையில்லாமல் மொழி மதம் திணிக்கப்படுகிறது இதனை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கணியம்பாடியில் பேச்சு

 

   வேலூர்மாவட்டம்,கணியம்பாடியில் உள்ள கண்பதி துளசிஸ் பொறியியல் கல்லூரியில் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

  இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுசெயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு 554 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களையும் பல்கலைக்கழக அளவில் 12 பதக்கங்களை வென்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

  இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கல்லூரி முதல்வர் பாரதி ,கல்லூரி நிர்வாகி வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில் மாணவர்கள் கொரோனா போன்ற சவால்களை தாண்டி ஜெயித்து வந்துள்ளீர்கள், உறுதியுடன் உங்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும்.

 தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் போராட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் போராட்டங்கள் இல்லாமல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது,

  பல போராட்டங்களுக்கு பின்னர் தான் ஜாதி மத பாகுபாடில்லாமல் கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளோம்.

 இன்றும் உங்கள் கண் முன் போராட்டங்கள் இருக்கிறது நமக்கு இஷ்டமில்லாத ஜாதி மதம் ஜாதி போன்ற திணிப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

  நீங்கள் படிப்பதுடன் நின்றுவிடாமல் இது உங்கள் உலகம் அதனை மாற்றுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் காலநிலை பருவநிலை மாற்றம் சவால்கள் உள்ளது இந்த பூமியை பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது என பேசினார்